ஆலங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பேரூராட்சிக்குட்பட்ட 1- வது, 2-வது மற்றும் 10. வார்டு பகுதிகளில் இளைஞரின் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளையொட்டி ஏழை பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

விழாவிற்கு ஆலங்குளம் நகர செயலாளர் எஸ்பிடி நெல்சன் தலைமையில் வகித்தார். ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் . திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன்,முன்னாள் ஒன்றிய செயலாளர்
பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட துணை செயலாளரும் 10. வது வார்டு கவுன்சிலர்
சுந்தரம் வரவேற்றார்.இதனை யெடுத்து தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கழக கொடி ஏற்றிவைத்து பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் தொழில் அதிபர் மணிகண்டன் முன்னாள் பேராட்சி துணை தலைவர் தங்க செல்வம், மாவட்டபிரதநிதி அன்பழகன், சாமுவேல்ராஜ்,கிளை பிரதிநிதிகள் அன்பழகன், அண்ணாவி காசி லிங்கம், உதயநிதி மன்ற ஒன்றிய தலைவர் அரவிந்ராஜ்திலக், ஒன்றிய பொருளாளர் அழகு சுந்தரம், கீழப்பாவூர் நகர செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய பிரதிநிதி ஆதி விநாயகம், சிறுபான்மை அணி முகமது மைதீன், தொழில் அதிபர் மோகன்லால், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்
சரஸ்வதி பாஸ்கரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *