மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது மேட்டுநீரேத்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஊரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில்
நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் நீரேத்தானை சேர்ந்த பூஜாரி கணேசன் கோவிலின் முன் வாசலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது
கருவறை முன்பு வைத்திருந்த உண்டியல் உடைத்து அதிலிருந்த காசு பணம் கொள்ளை போயி உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த பூஜாரி கணேசன். இதுகுறித்து சோழவந்தான் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சம்பவஇடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை.செய்தனர்.
பின்னர்.கோவிலின் உள் பிரகாரத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது
கொள்ளை போன அன்று இரவு சரியாக 12 .58 உள்ளே நுழைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் முகத்தை துணியால் மறைத்து சன்னதிக்கு முன்னால் உள்ள உண்டியலில் அடிப்பகுதி கதவின் பூட்டை உடைத்து உள்ளிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதும்
இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமர்ம நபர் மஞ்சள் கலர் டி-ஷர்ட் மற்றும் ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்திருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.இதையெடுத்து தடயவியல் நிபுணர்கள் வரைவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொள்ளைகளை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டு போலீசார் தேடிவருகின்றனர்.
மேலும் கடந்த மூன்றாண்டுக்குள்ளே மூன்று முறை இக்கோவிலில் உண்டியல் உடைத்து பணம் மற்றும் உற்சவர் சிலை கொள்ளை போயிருப்பதும்.
ஊரின் எல்லை
பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் இரவு காவலர் இல்லை இதுபோன்ற சூழ்நிலைகள் கொள்ளையர்களுக்கு சாதகமாக உள்ளதால் இதுபோன்ற கொள்னை சம்பவங்கள் அறங்கேறிவருவதாகவும் மேலும் இந்த கொள்ளை. சம்பவங்கள் தொடர்பாக இதுவரை சோழவந்தான் போலீசார் யாரையும் கைது செய்யப்படவும் இல்லை பொருட்கள் மீட்கப்படவும் இல்லை என கிராம பொதுமக்களும் பக்தர்களும் தங்கள் வேதனையை தெரிவித்து கொண்டனர். .