திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ஏலகிரி மலை சுற்றுலா தளம்.இந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் தரைப்பகுதியில் இருந்து 14 கொண்ட ஊசி வளைவுகளை கடந்து மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டும்.

இந்நிலையில் இன்று இரவு புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஏலகிரி மலைப்பாதை வளைவுகளில் மேலே ஏறி கொண்டிருந்த வாகனங்களுக்கு எதிராக காரை பின்னோக்கி ஓட்டி சென்று சாகசத்தில் ஈடுபட்ட நபரால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

மிகவும் ஆபத்தான முயற்சியில் ஈடுபட்ட நபர் குறித்து காவல்துறைக்கு தாகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *