தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களால் உலக புவி தினமான 22 .04. 2022 அன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். திட்டத்தின் நோக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை பரப்பு மற்றும் வனப்பரப்பினை அதிகப்படுத்துவது பள்ளி , கல்லூரிமாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இந்தத் திட்டத்தினால் வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோயில் வளாகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வ அமைப்பு சார்பில் 25000 மரக்கன்றுகளும். பள்ளி சார்பில் 25000 மரக்கன்றுகளும். கல்லூரி சார்பில் 15000 மரக்கன்றுகளும். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15000 மரக்கன்றுகளும். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10000 மரக்கன்றுகளும். இதர அரசு துறைகள் சார்பில் 10000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தில் நடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளி இணைச் செயலாளர்களின் பொறுப்பாளர்களும், அரசு அலுவலர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள் நிர்வாகங்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்

. மேலும் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசைவனம் .
அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய வனம். சமுத்திரம் ஏரியில் ஏற்படுத்தப்பட்ட வரும் பறவைகள் வனம். மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு வரும் ஆளி வனம் சிறப்புக்குரியதாகும். இதன் நிறைவாக இன்று 31-12 -2022 தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வீட்டுக்கு ஒரு விருச்சம் ஓராண்டின் ஒரு லட்சமாவது மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ஒரு லட்சம் மாவது மரக்கன்றுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நட்டு வைத்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் 31 .3 .2023க்குள் இந்த ஒரு லட்சம் மரக்கன்றுகளும் உயிருடன் வளர்ந்து வருவதை உறுதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல், தஞ்சை மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் மருத்துவர். வரதராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார், மருத்துவர். சங்கரநாராயணன், மருத்துவர்.சிங்காரவேல், புலவர் ராமதாஸ், வட்டாட்சியர் சக்திவேல், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் . அமைப்பாளர் .J.R.C அமைப்பாளர் ஜெகதீஷ் .மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *