பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி ’’தமிழைத் தேடி…’’ என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ஆம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது. இந்த பயணத்திற்காக பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சினையை டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டார். இலட்சினையை பாட்டாளி மக்கள் கட்யின் இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.