தென்காசி மாவட்டம்
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமையில் நடந்தது.

கௌரவ விரிவுரையாளர் ராஜதுரை வரவேற்றார்.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் கண்காட்சியை பார்வையிட்டு தொழில் நெறி வழிகாட்டி கருத்தரங்கை துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர், மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் மகாலட்சுமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட திறன்பயிற்சி அலுவலர், ஜார்ஜ் பிராங்கிளின் மாவட்ட வேலையாய்ப்பு அலுவர் ரம்யா வீரகேரளம்புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, துணை தாசில்தார் முருகன் உள்ளிட்டோர் பேசினர்
முடிவில் மார்த்தாண்டபூபதி நன்றி கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு கல்லூரி மாணவர்கள் சார்பில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *