எ.பி.பிரபாகரன் செய்தியாளர்,பெரம்பலூர்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஊரக வேலைகள் குறித்த குறைகள் மற்றும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க குறைதீர்ப்பாளர் நியமனம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கடபிரியதா தகவல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்தவதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை செயல்படுத்துவது தொடடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் பெரம்பலுார் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜானகிராமன் என்பவரை 8925811319 என்ற அலைபேசி எண்ணிலும், ombudsnregsperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

 பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *