நீலகிரி மாவட்டம் மவுண்டாடன் செட்டி சமுதாயம் நலச் சங்கம் சார்பில் கூடலூர் வட்டம் செருமுளி கிராமத்தில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் மாண்டலம் செட்டி சமுதாயம் சார்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சங்கத் தலைவர் நாராயண மாஸ்டர், செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களும் பொருளாளர் மணிகண்டன் ,செயற்குழு உறுப்பினர்களும் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் கூறினர்.