சென்னை கொளத்தூர் செய்தியாளர்
மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் சத்தியமூர்த்தியின் பணி நிறைவு விழா மாத்தூர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் மணலி சரக உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி ஆய்வாளர்கள் சுந்தர், சங்கர், சிவகுமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் போலீசார் ஆகியோர்கள் அவருக்கு பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துக்கள் கூறி மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.