தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சம்பத் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்புபெருந்திரள் முறையிடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலை முறை ஊதியம் வழங்கிட வேண்டும் ஓய்வூதியம் ஒன்பதாயிரம்தமிழக அரசு வழங்க வேண்டும் .

மற்றும் காலைச் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்கிட வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பபு.அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாதுரை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் தமிழக முதல்வர்தேர்தல் கால வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மற்றும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கோஷங்களே எழுப்பினர்.

மற்றும் மாவட்டச் செயலாளர் விஜயா. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பார்த்திபன். சி ஐ டி யு .மாவட்ட செயலாளர்.இரா. பாரி . அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு. உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *