கோவை சித்தாபுதூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,மாகாளியம்மன்,முனீஸ்வரன்,மதுரை வீரன்,அருள்மிகு கன்னிமார்கள் திருக் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் வைகாசி உற்சவதிருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.41 ஆம் ஆண்டாக நடைபெறும் இதில், பிரபல நடிகர்,தயாரிப்பாளர்,தொழிலதிபர்,சமூக சேவகர்,தற்காப்பு கலை வல்லுனர் என பன்முகங்களை கொண்டவரும்,பொதுமக்களால் வள்ளல் சக்கரவர்த்தி,கலியுக கர்ணன் என அழைக்கப்படும் பிரதீப் ஜோஸ் கரகம் அழைப்பு விழாவில் கலந்து கொண்டார்..

முன்னதாக,விழாவில் கலந்து கொண்ட வள்ளல் சக்கரவர்த்தி பிரதீப் ஜோஸிற்கு ஊர் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சார்பாக மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது..

தொடர்ந்து அவர்,கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு,கோவிலை சுற்றி வலம் வந்தார்..விழாவில் கோவில் கமிட்டி நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள்,அவரது ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *