ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பனங்காட்டாங்குடி பனையனார் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் .சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உடன் உள்ளார்
நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் 4700 கிமீ பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சென்ற மாதம் தொடங்கப்பட்டது.
இதுவரை 3800 கிமீ பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 900 கிமீ பாசன வாய்க்கால்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக தூர்வாரப்படும். இந்த தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏ மற்றும் வாய்க்கால்கள் நீர்வளத்துறையின் மூலம் தூர்வாரப்படுகிறது.
சி மற்றும் டி வாய்க்கால்கள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது விரைவில் இந்த தூர்வாரும் பணிகளும் முடிக்கப்படும் என தெரிவித்தார்
இவ்ஆய்வின் போது தலைமை பொறியாளர் (திருச்சி) இராமமூர்த்தி மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனாமணி, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் குருமூர்த்தி செயற்பொறியாளர் வெண்ணாறு கோட்டம் எம்.ஜி.ராஜேந்திரன் உதவி செயற்பொறியாளர் சிதம்பரம்உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தினர்