அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு வர்ணக் குடைகள் பரிவார அலங்காரத்துடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பழதட்டுகளை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இவ்விழாவில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கத்தினர் சார்பாக கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது அவருடன் திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்ரமணியன் ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், வாடிப்பட்டி பசும்பொன்மாறன், பாலமேடு நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன், இளைஞர் அணி நிர்வாகி
பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *