கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் அதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்