நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அரசு நாமக்கல் மாவட்ட நேரு யுகேந்திரா மற்றும் பாரதம் இளைஞர் நற்பணி சங்கம் இணைந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தலைவர் பி.வேலு, தலைமையில் ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள், ராசிபுரம் அரசினர் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
மேலும் பல இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு நிர்வாகிகள் இடத்தில் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில்காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், மருத்துவர்
Dr ராஜேஷ் பாபு,ஜேசிஐ தலைவர் ராஜேஷ், ஜே சி ஐ செயலாளர் கார்த்தி,தொகுதி ராஜாவெங்கடேசன்,ராஜா,லோகநாதன்,
விஜயகுமார்,கோகுல்ராஜ்,ரமேஷ்குமார்,பாஞ்சாலி, பள்ளி
தலைமை ஆசிரியர் பாபு, பயாலஜி ஆசிரியர்
சதீஷ்குமார்,சிவப்பிரகாசம், நாகராஜ், சுந்தர்ராஜன், மற்றும் ஆசிரியர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்