கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து கால்நடை வளர்ப்பு பிராணிகளுக்கான நெறி நோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஆ.ஜெ. மணிக்கண்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

.இம்முகாமில் இலவச வெறிநோய் தடுப்பூசி பணி, வெறிநோய் குறித்த விளக்கங்கள்,அறிகுறிகள். செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கான விழிப்புணர்வு ஆலோசனைகள், இறைச்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட விழிப்புணர்வு ஆலோசனைகளை பொதுமக்கள் மற்றும் செல்ல பிராணிகள் வளர்ப்போர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் முகாமில் கலந்து கொண்டு தங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசியினை 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு போட்டுச் சென்றனர்.முகாமில் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் சரவணன்,கால்நடை துறையின் மண்டல இணை இயக்குனர் சாந்தி,உதவி இயக்குனர் சுகுமார், மற்றும் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் தெய்வீகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாபு, வருங்கால துணை ஆளுநர் அன்பழகன், முன்னாள் துணை ஆளுநர் திலீப், வருங்கால தலைவர் செந்தில்குமரன், முன்னாள் தலைவர்கள் சுரேஷ்குமார், வெங்கடாஜலபதி, முன்னாள் பொருளாளர் சீனிவாசன்,முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள்மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் தமிழ்மணி, சங்கர்கணேஷ், சுரேஷ்குமார்,சிவா,சாரத பிரியா,சங்கர் கால்நடை ஆய்வாளர் சௌந்தரபாண்டியன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மணிவாசகம், வெங்கடேசன்,சங்கர், பாண்டி உள்ளிட்ட
பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *