மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியின் சார்பாக தஞ்சை கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றம் ஆகியன இணைந்து தமிழிசை விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற 23-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியை சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி துவக்கி வைத்தார். தொடர்ந்து மங்கள இசை நிகழ்ச்சி, சிறப்பு நாதஸ்வரம், தவில் இசைக்கச்சேரி, தேவாரப் பண்ணிசை, குரலிசை,நாட்டியம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இசைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி,தமிழ் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்