பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டம் அருகே அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொண்டுவரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர் நித்திஷ் குமார் மற்றும் அவருக்கு வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி நடராஜன் தலைமை தாங்கினார், வட்டார கல்வி அலுவலர் இராசாத்தி , ஆசிரியர் பயிற்றுநர் ஐயப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ் வெற்றி பெற்ற மாணவர் நித்தீஷ் குமாருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாநில அளவிலான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்ற மாணவர் நித்தீஷ் குமார் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து வெற்றி பெற்ற 25 மாணவர்கள் வெளிநாடு கல்விபயணம் செல்ல உள்ளனர்
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார்
பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, ஜெயப்பிரியா, பவானி, கவிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி மின்னல்கொடி வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் , பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் செல்லதுரை நன்றி கூறினார்.