நாமக்கல் JCIன் இணை அமைப்பான JCOM எனும் வணிகம் சார்ந்த அமைப்பின் கூட்டம் அதன் தலைவர் சதீஸ்குமார் தலைமை நடைபெற்றது.துணை தலைவர் கணேசன், செயலாளர் அனிதா, முன்னாள் தலைவர் ரவி, பயிற்சியாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பேரமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், வணிகர் சங்கங்களின் அவசியம் குறித்தும் பேசிய அவர், அனைத்து வணிகர்களும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், வணிகர்கள் அவரவர் தொழில் சார்ந்த சங்கங்களில் உறுப்பினராக இணைந்து பாதுகாப்புடன் வணிகத்தை தொடர வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து, வருகிற மே 5ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கும் 40வது வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து JCOM உறுப்பினர்கள் தங்களின் நிறுவனம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.

நிகழ்ச்சி நிறைவில் பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *