பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கும்மி அடித்து உற்சாக கொண்டாட்டம்.

தமிழர் திருநாள் பொங்களை முன்னிட்டு பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தோரணங்கள் அமைத்து சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபாடு செய்தனர்,
கொரோனா நோய் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கும்மியடித்தும் கயிறு இழுக்கும் போட்டியில் ஈடுபட்டனர்,


மாணவிகள் கூறுகையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை, தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தமிழகத் திருநாள் பொங்கல் முன்னிட்டு பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் திருநாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினோம், கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒன்றாக கூடி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ஆசிரியர்கள் மாணவி மாணவர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *