கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவின் முன்னதாக ஸ்ரீ முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜை செய்து மதியம் கிடா வெட்டு டன் உச்சிகால பூஜை நடந்தது அதைத்தொடர்ந்து சிறப்பான அன்னதானம் நடைபெற்றது இவ்விழா ஏற்ப்பாடுகளை தேயிலை ஆலை பணியாளர்கள் செய்திருந்த நிலையில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்