காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மவந்தினி சமேத ஸ்ரீ புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் சிதலமடைந்து இருந்த நிலையில் 5 கோடி மதிப்பில் கோவில் புரணைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் அருகாமையில் உள்ள வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதன் பின் அருள்மிகு ஸ்ரீ புண்ணிய கோடீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண மேலும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுங்க்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர்.
பொதுமக்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.