தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாடியூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்
ஊராட்சி மன்றத் தலைவர் தம.ஸ்நாபக அந்தோணி தலைமை யில் நடைப்பெற்றது.

கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துலெட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கிராமசபைக் கூட்டத்தில் வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மரக்கன்று நடப்பட்டது.அதனைத் தொடர்ந்து கிராமசபைக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் “எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்” என்ற உறுதிமொழி மற்றும் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.மேலும் தொழிலாளர்களை கௌரவிக்கப்பட்டது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பி.எல்.எம் மூலம் ஆவாஸ் பிளஸ் திட்ட பயனாளி கே.சின்னதங்கை என்பவருக்கு ரூ.50000/- காசோலை வழங்கப்பட்டது.ஊராட்சியில் உள்ள 3 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.150000/- கடன் வழங்கப்பட்டது.

தொழிலாளர் தினம் என்பதனால் சுயஉதவிக் குழு மூலம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான வெற்றிப் பெற்ற நபர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி || 2023-2024 சுகாதாரம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் மற்றும் பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுப்பதன் மூலம் கிராமப்புற சமூகத்தினரிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும்
ஒரு தனித்துவமான முயற்சியாக “நம்ம ஊரு சூப்பரு” பிரச்சாரம் தொடங்கப்பட்டு.
வாடியூர் ஊராட்சியில் தெருக்களில் “நம்ம ஊரு சூப்பரு” நடைபயணம் மேற்கொள்ளப்பட்டதுநடைபயணத்தின் போது ஒவ்வொரு வீட்டிற்கும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைக்கான கூடை வழங்கப்பட்டு பிரித்து வழங்க வேண்டு மென தெரிவிக்க ப்பட்டது.

மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் தென்காசி, திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்). த பிரான்சிஸ் மகாராஜன். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) பெ.திலகராஜ். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பெ.விஜயகணபதி, வட்டாட்சியர் தெய்வசுந்தரி வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் தமிழ்மலர்,
தோட்டக்கலை இயக்குநர், மாலதி, கால்நடைத் துறை இயக்குநர் மகேஸ்வரி ,மாவட்ட சமுக நல துறை நல அலுவலர் மதிவதனா,
பஞ்சாயத்து துணை தலைவர் சுதர்சன்,சமுக பாதுகாப்பு
திட்ட வட்டட்சியர் மகாலட்சுமி,சகி ஒன்ஸ்டாப் சென்டர் ஜெயராணி.கருவந்தா குறுவட்ட ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் பாலு,கிராம உதவியாளர்கள் இசக்கியம்மாள், மங்களம், ஊராட்சி செயலர் சார்லஸ், பணி தளப் பெருப்பாளர் வினேதினி, தேவி, பென்சியா, மற்றும் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிகுழ பெண்கள்,மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *