பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டம் அடுத்த தத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தத்தனூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் சித்ரை பௌர்ணமியை முன்னிட்டு ஆலய மேம்பாட்டுக்குழு சார்பில் பொங்கல் வைக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் கிராம மக்கள் அனைவரும் கடும் வெயில் சுட்டெரிப்பதால் மழைவேண்டியும் விவாசாயம் செழிக்கவும், ஆடு, மாடுகள் நோயின்றி வாழவும் வேண்டி பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.
இதில் ஊர் நாட்டார்கள் தேவேந்திரன் சின்னதுரை கந்தசாமி நீலமேகம் அன்பரசன் சங்கர் எழிலரசன் தனம் சின்னப்பிள்ளை உட்பட 50க்கும் மேற்ப்பட்ட கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதில் அம்மன் பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருளாசி பெற்றுச் சென்றனர்.

மேலும் விரைவில் ஆலய மேம்பாட்டு குழு சார்பில் ஆலய திருப்பணி தொடங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *