பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, உமையாள்புரம் ஸ்ரீ குங்கும சுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
அது சமயம் கடந்த 1 -ம் தேதி விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், பூரணாஹுதியுடன் தொடங்கப்பட்டு, நான்கு கால யாக பூஜைகளுடன், நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகளுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம வாசிகள், கோவில் வளாகத்தில் சூழ்ந்து இருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மீது புனித மஞ்சள் நீரை தெளித்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் பாபநாசம் இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் ஹாசினி, கணக்கர் கோபாலகிருஷ்ணன், கிராம வாசிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்கள்.