தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்தசி.ஆர்.பி.எப்.வீரர் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4-ம் தேதிஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில். வீரமரணமடைந்தார்.

இந்தநிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுஅவரது சொந்த ஊரான வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில்.

தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில்
தலைவர்அ. ராம்குமார் தலைமையில்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்ததுநிகழ்ச்சியால்கெளரவத்தலைவர்
என்ஆர்எஸ் மணி மற்றும் செயலாளர் வி.கே.முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

வீரமரணமடைந்த சந்திரசேகர் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்துமலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனையடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில்அவரது மனைவி ஜெனிபர் கிறிஸ்டி, மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், மாரிராஜ், சக்திகுமார், விஜய், கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *