இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கம் மற்றும் கௌரா இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் திருச்சி ஸ்ரீரங்கம் புத்தகத் திருவிழா 2026 செப்டம்பர் 18 முதல் 27 வரை 11மணி முதல் 9மணி வரை
ஸ்ரீரங்கம்,அம்மாமண்டபம் சாலை கிருஷ்ணாலயா மினி ஹாலில் நடைபெறுகிறது. புத்தக திருவிழாவில் வாய்மை எனப்படுவது யாதெனின் ஒரு சாமானியனின் சாதனை பயணம்
பத்மஸ்ரீ தாமோதரன் கிராமாலயா நிறுவனரின் சுய சரிதை புத்தகம் ஆட்டோ பயோகிராபி புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது.

நூலினை பத்மஸ்ரீ தாமோதரன் வழங்க அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பெற்றுக் கொண்டார்.இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கம் இயக்குநர் இராச இளங்கோவன், நற்றமிழ் நம்பி விஷ்வேஸ், கீர்த்தனா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


“ஒருவரின் வாழ்க்கையை அவர் வாழ்ந்த விதத்திலும், உணர்ந்த விதத்திலும், சந்தித்த அனுபவங்களின் வழியாகவும் அவரே பதிவு செய்வதே ஆட்டோ பயோகிராபி நூல்.” ஆகும்.
தமிழ் நாட்டில் கழிப்பிட வசதி குறித்த விழிப்புணர்வு பல வருடங்களுக்கு முன்னதாகவே தோன்றியிருந்தாலும், இன்னும் நிறைய கிராம பகுதிகளில் அந்த வசதி இல்லாமல் மக்கள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர்.

பலர் அந்த வசதியை சரிவர பின்பற்றுகிறார்களா என்றால் அது சந்தேகம் தான். இன்னும் கூட, பல கிராமங்களில் மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்துவதை விட, வயல்வெளிகள், புதர்கள், காடுகள், நீர்நிலைகள் அல்லது வேறு ஏதேனும் திறந்த வெளிகளில் தங்கள் கழிவுகளை விடுவித்து வருகின்றனர்.இந்த நிலையில், மக்களிடையே கழிப்பிட வசதிகளை பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அவர்களுக்காக லட்ச கணக்கில் கழிவறைகளை கட்டிக்கொடுத்தவர் சாயி தாமோதரன் ஆவார். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள தனது கல்லூரியின் தேசிய சேவைத் திட்டத்தின் (NSS) பிரிவில் உறுப்பினராக இருந்தபோது, ​​மக்களுக்கு துப்புரவு வசதிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது பெரிய கவலையை ஏற்படுத்தியது. ஆகையால் அருகில் உள்ள கிராம பகுதிகளை பார்வையிட்டவர்,

திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் கண்டு வருத்தமடைந்ததோடு, இந்த பிரச்சனைக்கு ஒரு நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தார்.1987 ஆம் ஆண்டு கிராமாலயா என்ற அரசு சாரா நிறுவனத்தை (NGO) தாமோதரன் நிறுவினார். அன்றில் இருந்து இன்று வரை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களில் உள்ள 1,000 கிராமங்கள் மற்றும் பல நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு WASH (Water, Sanitation and Hygiene) தொடர்பான அணுகலை வழங்குவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தாமோதரன் மற்றும் அவரது தன்னார்வ தொண்டர்கள் கடந்த முப்பதாண்டுகளில் சுமார் 6 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகளையும் 500 பள்ளிக் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்து உள்ளனர்.கிராமாலயா மூலம் கட்டப்பட்ட சுகாதார வசதிகள் தென் மாநிலங்களில் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தூய்மைப் பழக்கத்தை மாற்றியுள்ளது. திருச்சிராப்பள்ளியில் உள்ள கல்மந்தை, 2002 ஆண்டு இந்தியாவின் முதல் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) பகுதியாகஅறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2003ம் ஆண்டில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 62 வீடுகளைக் கொண்ட தாண்டவம்பட்டி என்ற கிராமம், இந்தியாவின் முதல் ODF கிராமமாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மைக்கல்லும் தாமோதரனின் தொண்டு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்தது.
தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகளையும், 300க்கும் மேற்பட்ட கிராமங்களையும் பல ஆண்டுகளாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதியாக மாற்ற கிராமாலயா தொண்டு நிறுவனம் செயல்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தண்ணீர் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி அளிப்பதற்கான தேசிய முக்கிய ஆதார மையங்களில் ஒன்றாக கிராமாலயாவை குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. அதேபோல, எஸ் தாமோதரன் குறைந்த விலை கழிப்பறை மாதிரிகள் மற்றும் கழிப்பறை தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிக்கான மையத்தையும் உருவாக்கியுள்ளார். இதனால் கிராமப்புற ஏழைகள், நகர்ப்புற ஏழைகள், கடலோரப் பகுதிகள், பழங்குடியினர் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுக் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்காக தாமோதரன் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.
1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட CRSP, 1990 களில் TSC, 2000 களில் NBA மற்றும் 2014 இல் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் போன்ற சுகாதாரத் திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். 2017ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அன்று, தாமோதரனுக்கு ‘டாய்லெட் டைட்டன் விருதினை’ துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு வழங்கி கௌரவித்தார். மேலும் இவரின் சேவையை பாரட்டும் விதமாக இந்திய அரசு பத்மஸ்ரீ விருதினை 2022 ஆண்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 2026 ஆண்டு வாய்மை எனப்படுவது யாதெனின் ஒரு சாமானியனின் சாதனை பயணம் தலைப்பில் நாற்பத்தியொரு அத்தியாயம் கொண்ட ஆட்டோ பயோகிராபி நூலினை பத்மஸ்ரீ எஸ் .தாமோதரன் வெளியிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *