தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
கைலாசநாதருக்கு பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து உலக அமைதிக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது. காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தார்கள் வருகை புரிந்த பக்தர்களுக்கு ஆவின் மண்டல தலைவர் ஓ.ராஜா டாக்டர் முத்துகுகன் குடும்பத்தார்கள் சார்பாக சிறப்பான அன்னதானம் வழங்கினார்கள்.
வி.ப.ஜெ.பசுமை உலகம் நர்சரி சார்பாக விலையில்லா மரக்கன்றுகள் பெளர்ணமி தோறும் வழங்கிவருகிறார்கள். இன்று பக்தர்களுக்கு மரக்கன்றுகள் காலையில் இருந்தே வழங்கிவந்தார்கள் . ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார்குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்திருந்தார்கள்.