கரூர் செய்தியாளர் மரியான் பாபு


சேலத்தில் மாவீரர் மக்கள் கட்சி துவக்க விழா நடைபெற்றது.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு உறுப்பினரும்,கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த கரூர் பாஸ்கரன் தனது தலைமையில் சேலத்தில் மாவீரர் மக்கள் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகபடுத்தினார்.

கட்சி தலைவர் பொறுப்பை ஏற்று கொண்ட எம்.கே.பாஸ்கரன் பொது செயலாளராக தருமபுரி சரவணன்,பொருளாளாளராக திருச்சி வழக்கறிஞர் இருதயசாமி, ஒருங்கிணைப்பாளராக எம்.பி.சதாசிவம், இளைஞரணி தலைவராக சிதம்பரம், வழக்கறிஞர் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு நியமித்தார். இந்நிகழ்வுக்கு பிறகு அமைப்பின் தலைவர் M K பாஸ்கரன் தலைமையில் தொடர்ந்து நடைபெற்ற முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன பின்னர் நிர்வாகிகள் தங்களது வாகனங்களில் கட்சி கொடி ஏற்றினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *