மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல்சித்தாமூர், பாபுராயன்பேட்டை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாகவும் மோசமான நிலையிலும் காட்சி அளித்து வந்ததை அடுத்துஇது குறித்து பாபுராயன்பேட்டை கிராம மக்கள் ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் சிவகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையைஏற்று பொன்மலர் சிவக்குமார் அவர்கள் தமிழக முதல்வரின் ஆணைப்படி மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுமார் 50 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலையை தொடங்க நேற்று காலை பூமி பூஜை செய்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வினை திமுகஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மலர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர்கள்செம்பருத்தி துர்கேஷ்,வசந்தா கோகுல கண்ணன்,
ஒன்றிய கவுன்சிலர் பார்த்தசாரதி, கலந்து கொண்டனர்.
இதில் பாபுராயன்பேட்டைஊராட்சி மன்ற தலைவர்
நவநீதம் லட்சுமணன்,மின்னல் சித்தாமூர் ஊராட்சி
மன்ற தலைவர் வழக்கறிஞர் பாலாஜி, உட்பட கிராம பொதுமக்கள் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *