பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே புலிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீப ஆராதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கரகம் காவடி எடுத்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டதில் இறங்கி தீ மிதித்து அம்மனை தரிசித்து வழிபட்டனர் .
இதனைத் தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சியும் தாரை தப்பட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியினை ஊர் நாட்டாமை மற்றும் கிராமவாசிகள் விழா குழுவினர் செய்திருந்தனர்.