புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் பெரியகடை போலீசில் ஆடியோ பதிவோடு புகார் அளித்தனர். அதில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அங்குள்ள மக்கள் அளிக்கும் ஆதரவால் பா.ஜனதா மோசமான தோல்வியை சந்திக்கும். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவரின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் ஆடியோ பதிவு மூலம் தெளிவாகிறது. எனவே மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், வக்கீல்கள் சுரேஷ், ராமலிங்கம்,வட்டார தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.