கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டுயானை கூட்டம் அங்குள்ள மாரியம்மன் கோவிலை இடித்து சேதமப்படுத்தியுள்ளது தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்துதால் பெரும் அச்சமாக உள்ளதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் அப்போது வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட நகர்மன்ற தலைவர் காட்டுயானைகளை தொடர்ந்து கண்காணித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்