ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடவாசல் வட்டம் ஆர்பாவூர் வாய்க்கால் ஆறு கிலோமீட்டர் உத்திரங்குடிவாய்க்கால் ஏழு கிலோமீட்டர் கீரந்தக்குடி வாய்க்கால் மூன்று கிலோமீட்டர் மற்றும் சிட்டிலிங்கம் வாய்க்கால் நான்கு கிலோமீட்டர் வரை தூர்வாரும் பணி நடைபெறுவதையும், வலங்கைமான் வட்டம் நத்தம் வாய்க்கால் நான்கு கிலோமீட்டர் பாடகச்சேரி வாய்க்கால் மூன்று கிலோமீட்டர் மற்றும் செம்மங்குடி வாய்க்கால் நான்கு கிலோமீட்டர் வடக்குபட்டம் கிராமம் கிளியன் வாய்க்கால் ஒன்பது கிலோமீட்டர் நார்த்தாங்குடி வாய்க்கால் மற்றும் மாணிக்கமங்கலம் வாய்க்கால் நான்கு கிலோமீட்டர் மற்றும் ஏழு கிலோமீட்டர் மருதடி வாயக்கால் நான்கு கிலோமீட்டர் வரை தூர்வாரும் பணி நடைபெற்று கொண்டிருப்பதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை விரைந்து முடிந்திட அலவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்
ஆய்வின் போது செயற்பொறியாளர் (வெண்ணாறு தஞ்சாவூர்) மதனசுதாகரன் உதவி செயற்பொறியாளர் கனகரத்தினம் உதவி பொறியாளர் தியாகேசன் வட்டாட்சியர்கள் அன்பழகன் (வலங்கைமான்) குருநாதன் (குடவாசல்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தினர்