நெல்லை மாவட்டம் பாளை யூனியன் நொச்சிகுளம் பஞ்சாயத்தில் மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட நாகசுதர்சனா நகர், வெங்கடாச்சலபதி நகர், ஆதிபராசக்தி நகர் ஆகிய 3 நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வற்காக குடிநீர் திட்டப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ஏற்கனவே குடிநீர் வசதி பற்றாக்குறை இருந்தது.

ஆகவே அதனை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நொச்சிகுளம் ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் அங்கு உள்ள வீடுகளுக்கு குடிநீர் சீராக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், அருண்தவசு, மகேஷ்குமார், லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா, சத்தியவாணிமுத்து, தனிதங்கம், நொச்சிகுளம் ஊராட்சிமன்ற தலைவர் வேலம்மாள் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *