எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் குறிப்பிட்டார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட ராசிபுரம் நகர திமுக சார்பில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின், அவர்களின் உத்தரவுக்கிணங்க ராசிபுரம்
புதிய பேருந்து நிலையம் முன்பாக திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ராசிபுரம் நகர திமுகச் செயலர் என்.ஆர்.சங்கர் தலைமை வகித்தார்.தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், ராசிபுரம் நகர மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு அரசின் சாதனை விளக்கிப் பேசினர்.

இதில் அமைச்சர் மா.மதிவேந்தன் மேலும் பேசியது: திமுக சமுத்துவ கொள்கையை நிலை நாட்டுவதற்காக கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்காமல் பணியாற்றும். அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 2006-ல் திமுக அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இடையில் அந்த சட்டம் நிறைவேற்றப்படாமல், தற்போது திமுக ஆட்சிக்கு வந்து மீண்டும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு ஆட்சிக்கு வந்தவுடன் 58 பேருக்கு இதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதே போல் தொகுதிக்குட்பட்ட சாலை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள், ஏழைகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

மேலும் தொடர்ந்து மக்களுக்கு அனைத்து விதமான அரசு நலத்திட்டங்களையும் சிறப்பாக தமிழக முதல்வர் அவர்கள் செய்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நகர மன்ற துணைத் தலைவர் கோமதி ஆனந்தன், அவைத் தலைவர் வைத்தீஸ்வரன், துணைத் தலைவர் அருண்லால், துணைச் செயலாளர் மோகன், மாதேஸ்வரி,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ரங்கசாமி, மாவட்ட பிரதிநிதி கே. ஆனந்தன், கழக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் எஸ். ராஜேஷ் பாபு, கலைமணி, நிர்மலா, தமிழரசி, நாகேஸ்வரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்களும், மாவட்ட சார்பு அணிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி பி அசோக், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜே.சுதா, தாயகம் பி. சரவணன், வழக்கறிஞர் டி. கீதாலட்சுமி, மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் காதர் பாஷா, ரவிச்சந்திரன், மற்றும் ராசிபுரம் நகர வார்டு செயலாளர்கள் இந்திரா தேவி, மணிவண்ணன், தங்கதுரை ,ஓபுளி ராஜன், சிவராமன், பழனிச்சாமி, மூர்த்தி, அமிர்தலிங்கம் ,ஏடிசி சக்திவேல், ராசிபுரம் நகர வார்டு பிரதிநிதிகள் யோகா ஸ்டிக்கர் ராஜா (எ) யோகராஜன், சிவக்குமார், சரவணன், வெங்கடேஷ், வசந்தகுமார், கார்த்திக். மேலும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், மாவட்ட சார்பு அணியினர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.கே.அன்சர் நகரக் கழக பொருளாளர் நன்றி உரை ஆற்றினார்..

இறுதியாக பல்வேறு மாற்றுக் கட்சியில் இருந்து அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் இளைஞர்கள் இணைந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *