எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலையூரில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.பாரம்பரியம் மிக்க இக்கல்லூரியின் 59 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சிவசக்திவேல் ஆண்டறிக்கை வாசித்து வரவேற்புரை ஆற்றினார். இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மாணவ,மாணவிகளிடையே கலந்துரையாடினார்.
அப்பொழுது மாணவர்களிடம் என்ன? படிக்க போகிறீர்கள் ஏன்? அந்த துறையை தேர்வு செய்தீர்கள் எனக் கேட்டு அறிவுறை வழங்கினர்.மேலும் கல்லூரியில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு நேர்காணலில் தேர்வான மாணவ,மாணவிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி அதிக அளவு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக அளவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக பொருளியல் துறை தலைவர் பேராசிரியர் இராஜு நன்றி உரையாற்றினார் இவ்விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.