தென்காசி மாவட்டம்கடையம் பெரும்பத்து ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தினை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2ன் கீழ், ரூ.12 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமை வகித்தார். யூனியன் துணை சேர்மனும், ஒன்றிய செயலாளருமான மகேஷ்மாயவன், யூனியன் சேர்மன் செல்லம்மாள், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னதம்பி முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வாழ்த்தி பேசினார் சிறப்பு விருந்திராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அங்கன்வாடியை திறந்து வைத்து பேசினார்.
இந.நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, ஒன்றிய கவுன்சிலர்கள்ரம்யா, சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருருமலைக்குமார், ராஜசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி,மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், கடையம் பெரும்பத்து திமுக நிர்வாகி பரமசிவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரசகனி ரவி, வார்டு உறுப்பினர்கள் ஜெயாமாரியப்பன், வேல்சாமி, ராஜேஸ்வரி வேல்ராஜ், லெட்சுமிவின்ஸ்டன் , ரஞ்சிதா பிரபு, த்திலங்கராஜன், சோபியா, முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் சொட்டு சுப்பிரமணியன், பாண்டியன், கிளை செயலாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் ஏற்பாட்டில் ஏராளமான பெண்கள் மலர் தூவியும், பூரண கும்பம் ஏந்தியும் வரவேற்பு அளித்தனர்.