எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருப்பன்கூரில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பாக திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர் தீக்கனல்என்.செல்வம் திராவிடம் மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி விழாபேருரை ஆற்றினார்.திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்ஸாண்டர், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்ஸாண்டர் பேரூராட்சி துணைத் தலைவர் அன்புச்செழியன், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்