வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இரண்டாண்டுகள் சாதனைகள் குறித்து விருப்பாட்சிபுரம், கோவிந்தகுடி, ஆவூர் ஆகிய மூன்று இடங்களில் பிரசார பொது கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர், கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் அயாரது உழைப்பின் காரணமாக இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் விருப்பாட்சிபுரம் ஊராட்சி, கோவிந்தகுடி ஊராட்சி, ஆவூர் ஊராட்சி ஆகிய மூன்று இடங்களில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் தெட்சிணாமூர்த்தி, நகர
செயலாளர் பா. சிவநேசன், பொதுக்குழு உறுப்பினர் வி. பிருதிவி ராஜன், அவைத்தலைவர் க. பரமசிவம், பொருளாளர் இரா. பாஸ்கர், துணைச் செயலாளர்கள் பா. சுப்பிரமணியன், இரா. பரமசிவம், எஸ். மீரா, மாவட்ட பிரதிநிதிகள் ச. சு. பாலசுப்பிரமணியன், பா. கல்யாணசுந்தரம், க. சேகர், க. தனித்தமிழ் மாறன், ச. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . தலைமை கழக பேச்சாளர் இடி முரசு ந. மணி முத்து சிறப்புரையாற்றினார்.
விருப்பாட்சிபுரம் ஊராட்சி கூட்டத்திற்கு விருப்பாட்சிபுரம் ஊராட்சி செயலாளர் ராயல் திருநாவுக்கரசு, எஸ். எஸ். சாமிநாதன், சி. அண்ணாதுரை, ஏ. ராஜேஷ், கோவிந்தகுடி ஊராட்சியில் எம். அபுபக்கர், ஆர். கருப்பையன்,டி.மாரிமுத்து, எம். சேகர், பி. மணிகண்டன், டி. சரவணன், என். செல்வம், கே.ஹ்ஜா.ஆவூர் ஊராட்சியில் ஏ. எம். ராஜ் முகமது,ஆர், கோவிந்தராஜன், துர்கா ரமேஷ், ரசூல் நஸ்ரின், லுக்மான், என். ஷாஜகான், யூ. உபயதூல்லா ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.