தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார். மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *