விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகமான கூட்டேரிப்பட்டில் மண்டல் தலைவர்கள் மற்றும் மண்டல் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் AD இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் எத்திராஜ், மாவட்ட பொருளாளர் AC சத்தியநாராயணன், மாவட்ட துணை தலைவர்கள் மூர்த்தி,NA ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர்களின் பணிகள் குறித்தும் மாவட்ட தலைவர் AD.ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முருகன்,சந்திரலேகா விஜயன், சந்திரலேகா பிரபாகரன், விஜயலக்ஷ்மி, மாவட்ட விவசாய அணி தலைவர் குட்டியாண்டி, மகளிர் அணி மாவட்ட தலைவி அருளரசி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் , அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் ,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா,திருமால்,G. ராம்குமார்,மண்டல் தலைவர்கள் யுவராஜ், வெங்கடேசப்பெருமாள், முருகப்பெருமான், சுந்தர், ஞானசேகர், முருகன், ஏழுமலை, செந்தில், சண்முகம், எழிலரசன்,ராமு,தங்க ராமு, அசோக்குமார், ஜெயபிரகாஷ், ஏழுமலை மற்றும் மண்டல் சக்திகேந்திர பொறுப்பாளர்கள், மண்டல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..