ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் தூய்மைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்

குடவாசல் வட்டத்திற்குட்பட்ட மஞ்சக்குடி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் பள்ளி வளாகங்கள்கிராம நிர்வாக அலுவலகம் அங்காடிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மை பணிகளையும் பார்வையிட்டு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்

தொடர்ந்து 52.புதுக்குடி ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம், கோவில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுவருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டு கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பனங்காட்டான்குடி பகுதியிலுள்ள மனோலயம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்

தொடர்ந்துமன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அலுவலக கோப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வில்மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனா மணி வட்டாட்சியர் கார்த்திக் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *