நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிற் சங்க மாநில தலைவர் சின்னசேலம் K.A.நாகராஜன் ஐயா அவர்களின் முதலாண்டு நினைவு அஞ்சலி ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு மாவட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் முன்னதாக இடியோசை சின்னசேலம் கே.ஏ. நாகராஜன், அவர்களுக்கு தமிழ்நாடு உப்பிலிய சமூக தொழிலாளர்கள் நலச்சங்கம், உப்பிலிய, உப்பாரா சமூக நல பாதுகாப்பு அறக்கட்டளை சார்பிலும், மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது புகழை கோஷங்களாக எழுப்பினர்.
இதே போல அவரது குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் வி நகர் 17 ராசிபுரம் அவரது இல்லத்திலும் மற்றும் தெருக்கள் பகுதியில் அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை சிறப்பாக நடத்தினர்.
இந்த நிகழ்வில் மாநில நிர்வாக தலைவர் M.வெற்றிவேல்,M.A.B.Lமாநில துணை செயலாளர் R.ரங்கசாமி, சேலம் மண்டல தலைவர் K.மணிவண்ணன், புரட்சி கர கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொங்காளி மேஸ்திரி, மாநில இளைஞர் அணி தலைவர் K.P.சங்கர், உப்பிலிய சமூக தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பழனியம்மாள், தர்மபுரி மாவட்ட தலைவர் சிவகாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் செல்வராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜகோபால், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பழனி, சித்தனூர் ஆறுமுகம், ஜெய் ஜவன் தொழிற் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சையத் அமீன், மாநில தலைவர் ஆறுமுகம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்..
நிகழ்ச்சி இறுதியில்உப்பிலிய சமூக தொழிலாளர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர்A.N.தனராஜ் நன்றி கூறினார்..