எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் நோயாளிகளின் நலன் கருதி ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது

ரூபாய் 20 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடத்திற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டில் பணியினை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண்ராஜ், குழந்தைகள் நல மருத்துவர் மருதவாணன், சீர்காழி நகர செயலாளர் தம்பி.ம.சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன்,சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *