ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நி்லைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். இப்பள்ளி மாணவி எஸ்.மதுநிஷா 500-க்கு 488 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

பாடவாரியான இவரது மதிப்பெண்கள்: தமிழ்- 96, ஆங்கிலம்-99, , கணிதம்-100, அறிவியல்- 96, சமூக அறிவியல் -97. இதே போல் மாணவர் ஆர்.அனுபரத்ராம் 480 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது பாடவாரி மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 92, ஆங்கிலம்-96, ,கணிதம்-99, அறிவியல்- 97, சமூக அறிவியல் -94. மாணவர் சி.எஸ்.சஞ்ஜெயந்த் 476 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். இவரின் பாடவாரி மதிப்பெண்கள்: தமிழ்- 91, ஆங்கிலம்-99, ,கணிதம்-97, அறிவியல்- 95, சமூக அறிவியல் -94.

சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளித் தலைவர் என்.மாணிக்கம், செயலர் வி.சுந்தரராஜன், பொருளாளர் வி.ராமதாஸ், கல்விக்குழுத் தலைவர் சி.நடராஜூ, நிறுவனத் தலைவர் மருத்துவர் ஆர்.எம்.கிருஷ்ணன், சிபிஎஸ்சி பள்ளிச் சேர்மேன் எம்.ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.பெத்தண்ணன், இணைச்செயலர் வி.பாலகிருஷ்ணன், கல்வியியல் கல்லூரி சேர்மேன் கே.குமாரசாமி, டிரஸ்டி எஸ்.சந்திரசேகரன், பள்ளி முதல்வர் பி.கிருஷ்ணமூர்த்தி , பொறுப்பாசிரியர் வெண்ணிலா உள்ளிட்டோர் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *