வாடிப்பட்டி

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிசாமி.69.வது. பிறந்தநாளை முன்னிட்.டு ,போடிநாயக்கபட்டியில் உறுப்பினர் சேர்க்கை.மற்றும் நலத்திட்ட உதவி அன்னதானம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலாளர் அசோக் தலைமை தாங்கினார்.

புதிய உறுப்பினர் சேர்க்கைகளை முன்னாள்.அமைச்சர் ஆர்.பி..உதயகுமார் எம்.எல்.எ தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்திய அரசியலில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெற்று தந்தார்.அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிசாமி தலைமைலான அதிமுக அரசு பெற்று கொடுத்தது.

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்ததில் ,காப்பாற்றப்பட்டதில் அ.இ அ தி மு.க அரசுக்கு தான் முக்கிய பங்கு உண்டு ஏன்னெனில் ,அ தி மு க சட்டமன்ற உறுப்பினர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரிய சட்ட மசோதாவை நிறைவேற்றி அதில் வாக்களிக்கின்ற வரலாற்று பெருமையும்
.காவிரி பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சனை, மேகதாது பிரச்சனை போன்ற பல்வேறு ஜீவாதார உரிமைகளை ஜெயலலிதா. அரசு தான் உரிமையை பெற்று தந்தது. ஆனால் இன்றைக்கு முல்லைப் பெரியாறு, மேகதாது ஆகிய பகுதிகளில் அணைகட்ட முயற்சி நடைபெற்று வருகிறது ஆனால் தமிழக முதலமைச்சர் இன்றுவரை மவுனமாக இருக்கிறார். .மேலும் இன்றைய தமிழகத்தில் வீட்டுக்கு ,வீடு குழாய் மூலம் டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் நிலை உருவாகும்..

அதற்கு முன்னோட்டம்தான் மக்களை தேடி மது என்ற நிலையை திமுக அரசு உருவாக்கி உள்ளது.
இரண்டு வருட திமுக ஆட்சியில் சாராயம்.மற்றும் ,மதுபானங்கள் விற்பனை அதிகரித்து உள்ளது சாராயம் குடித்து இறந்தவருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட்டு சென்ற நாலு பேர் பலியாகி உள்ளனர் அவர்களுக்கு நிதி தரவில்லை.தமிழகத்தில்
இன்றைக்கு 90 லட்சம் படித்த இளைஞர் உள்ளனர் அவர்களுக்கு எந்த வேலையும் வழங்காமல்சர்வாதிகாரி அமின், முசோலனினுடைய மறு உருவமாக இருக்கிற ஸ்டாலின் ஆட்சி செயல்பட்டு வருகின்றது

மேலும் கள்ளசார சாவுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் 30,000 கோடி ஊழல் குறித்து கூறிய அமைச்சர் தியாகராஜனை தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றி உள்ளனர். இவரை அமைச்சர் பதவி எடுத்தால் அடுத்த ஆடியோவை ரிலீஸ் ஆகும் என்ற பயத்தில் உள்ளனர் அமைச்சர் தியாகராஜன் வாய் திறந்தால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும்.
முதியோர் ஓய்வு திட்டத்தை1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கும் என்று கூறினார்கள் ஆனால் இன்றைக்கு 7 லட்சம் பேருக்கு நிறுத்தி விட்டார்கள்.
உலகத்திலேயே ஒரு கோமாளி அரசாக திமுக அரசு உள்ளது கள்ளசாரயம் விற்பனை செய்யப்பட்டிருப்பவருக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டிருக்கிற நிர்வாகக் குளறுபடி உள்ளது.என
பேசினார்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா,எஸ் எஸ் சரவணன், மற்றும் வாடிப்பட்டி சோணை,, ஒன்றிய செயலாளர் கணேசன், .மாவட்ட. மகளிர் அணி லெட்சுமி..சந்தனதுரை. உள்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *