நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. திருக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று வைகாசி அமாவாசை வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் ,இளநீர், பன்னீர் மற்றும் சொர்ண அபிஷேகம் போன்ற பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு வெள்ளி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாரணை காட்டப்பட்டது.
வைகாசி அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று நித்திய சுமங்கலி மாரியம்மனை வணங்கி சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.