உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம்-கண்டுகொள்ளாத மின்துறை துறை அதிகாரிகள்

தூத்துக்குடி 10 வது வார்டு கிருஷ்ணராஜபுரம் 9வதுதெரு அமைந்துள்ள மின் கம்பம் நடு ரோட்டில் அமைந்துள்ளது இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள் பல முறை மாமன் உறுப்பினர் செ. பத்மாவதி செண்பகச் செல்வன். மின்வாரியத்திடம் மனு அளித்தார்கள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை மின்வாரியத்தின் அலட்சியப் போக்கினால் சாலையில் இருக்கும் மின் கம்பத்தினால் வாகனங்களால் இரவு நேரத்தில் விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளது

மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலமுறை அதிகாரிகலிடம் பொது மக்கள் தெரிவித்தும் பத்திரிகையில் செய்திகள் வந்தும் கண்டுகொள்ளாத மின் துறை சார்ந்த அதிகாரிகள்.

எனவே மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *