பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு யானை புகுந்து 2 இலட்சம் மதிப்பிலான தென்னை, வாழை மாங்காய் மரங்கள் சேதம். கண்டுகொள்ளாத அதிகாரிகள் தொடரும் காட்டு யானை அட்டகாசம்.
நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது.55), இவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மாமரங்கள், வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களை வைத்து கடும் வறட்சியிலும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகின்றார்.

தற்போது மாம்பழங்கள் அறுவடைக்கு தையரான நிலையில் நேற்றிரவு முனியப்பன் தோட்டத்திற்க்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை மாமரங்களில் இருந்த மாம்பழங்களை தின்றும், 30க்கும் மேற்பட்ட மாமரங்கள், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் உள்ளிட்ட சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மாம்பழங்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்தியது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் , யானைகள் வருவதை தடுக்க காட்டு பகுதிகளில் தடுப்பு வேலி, யானைப் பள்ளம், தண்ணீர் தொட்டி வைக்கப்படாததால் தினமும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *